Featured

பதித மார்க்கத்தாரை மனந்திருப்பும் ஜெபமாலை!

பல வருடங்களுக்கு முன், ஓர் மேற்கத்திய நாட்டில், பெயாட்ரிஸ் அலென் என்ப வள் வசித்து வந்தாள். அவள் ஓர் ஆங்கிலேயப்பிரபுவின் மனைவி. பிரபுவின் குடும்பம் புராட் டஸ்டான்டு பதிதத்தை அனுசரித்தது. பெயாட்ரிஸ், தப்பறையான அப்பதித மதத்தின் மீது, பற்று கொண்டிருந்தாள். அவள் வீட்டினருகில், பிரிட்ஜெட் மர்பி என்ற ஐயர்லாந்து நாட் டைச் சேர்ந்த ஓர் மூதாட்டிதனியாக வசித்து வந்தாள்; அவள் சத்திய கத்தோலிக்க வேதத் தைச் சேர்ந்தவள். சகல வேத கடமைகளையும் பிரமாணிக்கத்துடன் அனுசரித்து வந்தாள். அவள் எப்போதும், மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் ஜெபமாலை ஜெபிப்பதை பெயாட்ரிஸ் கவனித்து வந்தாள். பதித மதத்தில் பற்றுடைய பெயாட்ரிஸ், மற்ற பதிதரைப் போல, ஆங்காரத்தால் ஏவப்பட்டவளாக, சத்திய வேதத்தின் கோட்பாடுகளையும், ஜெபங்

களையும், பக்தி முயற்சிகளையும், இழிவாகக் கருதி, அவற்றை, பாப்பு மார்க்கத்தாரின் குருட்டு பக்தியென்று கேலி செய்வாள்.

தான் விசுவசிக்கும் பதிதமதமே, உண்மையான வேதம் என்று கருதிய பெயாட்ரிஸ், அண்டை வீட்டினளான அக்கத்தோலிக்க மூதாட்டியைத் தனது பதித மதத்திற்கு எப்படியா வது மனந்திருப்ப வேண்டும் என்பதில் கவனமாக இருந்தாள். தன்னுடைய மதத்தின் வெளிச்சத்திற்கு, கத்தோலிக்கரை கூட்டி வர வேண்டும் என்று நினைத்த பெயாட்ரிஸ், ஒரு நாள், மர்பி பாட்டியிடம், பாட்டி, ஏன் ஒரே மாதிரியான வார்த்தைகளையேக் கொண்டு ஜெபிக்கிறீர்கள்? அது உங்களுக்கு சலிப்பாக இல்லையா? படிப்பறிவு இல்லாதவரின் ஜெபம் தானே அது? என்று கேலியாகக் கேட்டாள். அதைக் கேட்ட பாட்டி, “என்ன! ஜெபமாலை யைப் பற்றியா, அவ்வாறு என்னிடம் கேட்கின்றாய்? அது, தனிமையில் இருக்கும் எனக்கு, எவ்வளவு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருகிறது ! துன்பத்திலும் துயரத்திலும் என்னை, அவ்வுன்னத ஜெபம் தேற்றுகிறது. என் இருதயத்திற்கு சர்வேசுரனுடைய சமாதானத்தை, அளிக்கின்றது. அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களை, ஜெபமாலையை ஜெபிக்கும் யாவரும் பெற்றுக் கொள்வர். ஆதலால், ஆன்ம சரீர ஆபத்துக்களிலிருந்தும், பசாசின் சகல தீமைகளிலிருந்தும், அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். சர்வேசுரனுடைய பரிசுத்த தாயாருடன் பேசுவதை, கல்வியறிவு இல்லாதவருடைய ஜெபம் என்று நீ சொல்வது, தேவ தூஷணமல்லவா? அதற் காக நீ ஆண்டவரிடம் மன்னிப்பு கேள் ! ஜெபமாலை ஜெபிக்கும்போது, தேவமாதாவுடன் பேசுகிறேன் என்பதை, அறிந்துகொள்’ என்றாள்.

ஜெபமாலையைப்பற்றி, மர்பி பாட்டி கூறியதைக் கேட்டபெயாட்ரிஸ், பாட்டியிடம், ஜெபமாலையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததெல்லாவற்றையும் எனக்குக் கூறுங்கள் என்று கேட்டாள். காய்கறி விற்று ஜீவித்து வந்த அந்த ஏழைப்பாட்டி, அதிக கல்வியறிவு இல்லாதி ருப்பினும், ஞானத்துடனும் சந்தோஷத்துடனும், ஜெபமாலையிலிருந்த பாடுபட்ட சுரூபத் தைக் காண்பித்துக் கொண்டே, பரிசுத்த ஜெபமாலையைப்பற்றி பின் வருமாறு விவரித்தாள்: நான் ஜெபமாலை ஜெபிக்கத் தொடங்குமுன், திவ்ய சேசுவை, சிலுவையிலிருந்து இறக்கி, வியாகுல மாதாவின் மடியில் கிடத்தியதும், திவ்யதாயார் செய்தது போலவே, நானும் ஆண் டவரின் ஐந்து திருக்காயங்களையும் அன்புடன் முத்தி செய்வேன். நேச இரட்சகர் எனக்காகப் பட்ட பாடுகளுக்காக, அவருக்கு நன்றி செலுத்துவேன். என் பாவங்களை மன்னிக்கும்படி யும், நான் இறந்ததும் என்னை மோட்சத்திற்குள் சேர்த்துக்கொள்ளும்படியும் நேச ஆண்டவ ரிடம் கெஞ்சி மன்றாடுவேன்.

ஜெபமாலையில், இரு பகுதிகள். ஒன்று சிறிது அதில் ஐந்து மணிகள் மாத்திரமே உண்டு. ஆயுள் குறுகியது. என் துன்பங்கள் சீக்கிரம் முடிந்துபோகும். சாவுவிரைவிலேயே வரும். நல்ல மரணத்திற்காக நான் எப்போதும் தயாரிக்க வேண்டும். ஏனெனில் எந்நேரத்திலும் நான் சாக லாம் என்று, அது எனக்கு நினைவூட்டுகிறது. நன்மரண வரம் கேட்டு மன்றாடுவேன். ஜெப மாலையின் மற்றொரு பகுதி, பெரிய பகுதி. இனி வரவிருக்கும், முடிவில்லாத நித்திய ஜீவியத் தைப் பற்றி அது, நமக்கு நினைவூட்டுகிறது. பிரிட்ஜெட் மர்பி! எச்சரிக்கையாயிரு! நீ மோட் சத்துக்குப் போக வேண்டும். நரகத்துக்குப் போகக் கூடாது ! என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். சர்வேசுரனை மனநோகச் செய்யாமலிருப்பதற்கு, இனி, எப்பாவத்தையும் கட் டிக் கொள்ளாமல், உத்தம் கத்தோலிக்க கிறீஸ்துவளாக ஜீவிப்பதற்கு, முயல்வேன். பெரிய மணிகளில், ஆண்டவரே கற்பித்த ஜெபத்தை சொல்கிறேன். இந்த ஜெபத்திற்கு, அவர் செவி கொடுப்பார். ஏனெனில், செவி கொடுப்பதாக, அவரே வாக்களித்திருக்கிறார். இது, மிகவும் அழகு வாய்ந்த ஜெபம். ஆசையுடனும், நேசத்துடனும் கடவுளை, பிதாவே” என்று அழைக் கிறேன். நம்மை பரமானந்த சந்தோஷத்தில் ஆழ்த்துவதற்கு இந்நினைவே போதும்.

சிறு மணிகளில், மங்கள வார்த்தை ஜெபத்தை ஜெபிக்கிறேன். ஆண்டவருடைய திருமனிதவதாரத்தின் ஆச்சரியமிக்க தேவ இரகசிய நிகழ்வையே, இந்த அழகிய ஜெபத்தில் தியானிக்கிறேன். பரலோகத் திட்டத்தின் படி, அர்ச். கபிரியேல் சம்மனசானவர் தேவமாதா விடம் வாழ்த்திக்கூறிய மங்கள வார்த்தையினுடைய தேவ இரகசியத்தைப் பற்றி ஆச்சரியத்

துடன் தியானிக்கிறேன். திவ்ய இரட்சகருடைய தாயாராகப்போகும் சுபசெய்தியைக் கூறிய சம்மனசானவருடைய அதே வார்த்தைகளைக் கொண்டு, தேவமாதாவை, நாம் திரும்பதிரும்ப வாழ்த்தும் போது, தேவமாதா மிகுந்த சந்தோஷத்துடன் சர்வேசுரனைவாழ்த்துவார்கள். அது, சர்வேசுரனுக்கு மிகவும் உகந்த ஜெபமாக இருக்கும். அதனால், நாம் எவ்வளவோ அபரிமித மான தேவவரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வோம்! அடிக்கடி, மங்களவார்த்தை ஜெபத் தை ஜெபிப்பதின் வழியாக, சம்மனசானவர் கொடுத்த சந்தோஷத்தை, தேவமாதாவிற்கு, நானும் கொடுப்பதற்கு ஆசிக்கிறேன்.

தேவமாதா சர்வேசுரனுடைய தாய்; என்னுடைய தாயாகவும் இருக்கிறார்கள். நானும் அர்ச்சிஷ்டவளாக ஆக வேண்டும் என்று, தேவமாதாவிடம் விண்ணப்பிப்பேன். அதற்கு அவர்கள் உதவுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஏனெனில், கிறீஸ்துவர்களெல்லோரும் அர்ச்சிஷ்டவர்களாக வேண்டும் என்பதே, சர்வேசுரனுடைய திட்டம். அத்திட்டத்தை, செயல்படுத்துவதற்காகவே, தேவமாதா, உலகிலுள்ள சகல மனிதரையும், தமது பிள்ளைக ளாக, ஆண்டவர் சிலுவையில் மரிக்கும்போது, தத்து எடுத்துக்கொண்டார்கள். அர்ச்சிஷ்ட மரியாயே! என்ற மங்களவார்த்தை ஜெபத்தின் பிற்பகுதி மன்றாட்டை, ஜெபிக்கும் போது, பரதேசத்தின் ஏவையின் மகளாகிய, எனக்காக, இப்பொழுதும், என் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்படி, தேவமாதாவிடம் மன்றாடுவேன்.

எனவே தான், ஜெபமாலை ஜெபிக்கும்போது, நான் சர்வேசுரனுடைய தாயாருடன் பேசுகிறேன் என்பதை தியானித்து, மிகுந்த சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் ஜெபிக்கி றேன். அது ஒரு போதும், எனக்கு சலிப்பை அளிக்காத உன்னதமான ஜெபமாக இருக்கிறது. ஜெபமாலை ஜெபிக்கும் கத்தோலிக்கராகிய எங்களுக்கு, சர்வேசுரனுடைய மாதா, அளவில் லாத ஆன்ம சரீர நன்மைகளை அளித்து வருகிறார்கள். சர்வேசுரனுடைய திருமனித அவதாரத் தைப் பற்றியும், அவர் 33 ஆண்டுகள் உலகில் சஞ்சரித்ததைப் பற்றியும் தியானிக்கிறோம். அவைதான் சந்தோஷ தேவ இரகசியங்கள். அவர் பட்ட கொடிய பாடுகள், சிலுவை மரணத் தைப் பற்றியும் தியானிக்கிறேன். அவை துக்க தேவ இரகசியங்கள். நேச ஆண்டவருடைய திருப்பாடுகளைப் பற்றி, தியானிக்கும் போது, நம் பாவங்களின் மட்டில் உத்தம மனஸ்தாபம் ஏற்படுகிறது. தேவ சிநேகம் நம்மிடம் அதிகரிக்கிறது. ஆண்டவருடைய உத்தானத்தைப்பற் றியும், மோட்ச ஆரோகனத்தைப் பற்றியும், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவருடைய வருகை யைப் பற்றியும், பரலோக பூலோக இராக்கினியான தேவமாதவின் மோட்சாரோபனத்தைப் பற்றியும் தியானிப்பதே, மகிமை தேவ இரகசியங்கள். தினமும் தேவாலயத்திற்கு செல்வேன். திவ்ய நற்கருணைப்பேழையில் நமக்காக, ஆண்டவர் காத்திருக்கிறார். திவ்யபலிபூசையில் பக் தியுடன் பங்கேற்பேன். திவ்ய நன்மை வழியாக, என் இருதயத்திலும் எழுந்தருளி வரும் நேச ஆண்டவரை தகுதியுடன் வரவேற்பதற்கு, எனக்கு உதவும்படி, தேவமாதாவிடம் ஜெபிப் பேன். அவர்களும் எனக்கு உதவுவார்கள், என்று கூறி முடித்தாள்.

பெயாட்ரிஸ், பாட்டியிடம், அதிகம் படிப்பறிவு இல்லாத உங்களுக்கு இவையெல் லாம் யார் கற்பித்தது? என்று கேட்டாள். அதற்கு மர்பி பாட்டி, ஐயர்லாந்தில், பக்தியுள்ள கன்னியாஸ்திரிகளும், சங்.ஒற்றூல் சுவாமியாரும் கற்பித்தார்கள் என்றாள். தன் பதித மார்க் கத்தைச் சேர்ந்த பாதிரிமாரும், ஆயர்களும், இதுவரை, இவ்வளவு நேர்த்தியான பிரசங்கத் தைச் செய்யவில்லை என்று பெயாட்ரிஸ் உணர்ந்தாள். பெயாட்ரிஸின் குடும்பம் மனந்தி ரும்ப வேண்டுமென்று என்று, பாட்டி, ஜெபமாலை ஜெபிக்கும்போதெல்லாம் இடைவிடா மல் வேண்டிக்கொண்டிருந்தாள். ஜெபமாலையின் வல்லமையால், தேவ அனுக்கிரகத்தை அடைந்த பெயாட்ரிஸும் அவளுடைய குடும்பத்தினரும், விரைவிலேயே, புதுமையாக, சத்திய திருச்சபையில் சேர்ந்தனர். தங்களுடைய மனந்திரும்புதலுக்காக மர்பி பாட்டி, பயன் படுத்திய ஜெபமாலையை, ஓர் விலையயர்ந்த பொக்கிஷமாக, பெயாட்ரிஸ் எப்பொழுதும் தன்னுடன் வைத்திருந்தாள். தங்களுடைய மனந்திரும்புதலுக்குக் காரணமான அப்பரிசுத்த ஜெபமாலையை எல்லோரிடத்திலும் காண்பித்து, அதன் வரலாற்றை விவரிப்பாள். .