பதிதப் பெண், சத்திய வேதத்தில் சேர்ந்த புதுமை

பல வருடங்களுக்கு முன்பு, அமெரிக்க ஐக்கியநாட்டில், மார்த்தா என்ற ஓர் புராட்டஸ்டன்டு சிறுமி இருந்தாள். அவளுடைய தந்தை ஒரு பதித சபையின் பாதிரியாராக இருந் தார். சிறுமி எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பாள். தந்தைக்கு எப்பொழுதும் அவள் மீது பிரியம். ஒருநாள் தெருவின் கடைசியிலிருந்து தன் தந்தை ஒரு அந்நியருடன் நடந்து வருவ தைக் கண்டாள். உடனே, தந்தையிடம் ஓ டினாள். அவர் தன்னுடன் வந்த அந்நியரிடம், “இவள் என் மகள் மார்த்தா ” என்றார். மகளிடம்,” இவர் சங். வால்ஷ் சுவாமியார். ஒரு கத்தோ லிக்க குருவானவர்” என்று கூறி அந்நியரை அறிமுகம் செய்தார். குருவின் கையைகுலுக்கிக் கொண்டே, மார்த்தா, அவருடைய முகத்தை, இமை மூடாமல், பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளுடைய உடல் சிலிர்த்தது. முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் ஒன்றும் பேசவில்லை. குருவானவர் கறுப்பு அங்கி அணிந்திருந்தார். உயரமான உருவம். அவருடைய கனிவான பார்வை, சிறுமியின், இருதயத்தை ஊடுருவியது. தலைகுனிந்து அவருக்கு அவள் வணக்கம் செலுத்தினாள். அவருடைய தோற்றம் சிறுமியின் மனதை விட்டு அகலவில்லை.

குருவானவரை, பதித பாதிரியார், தன்னுடைய பதிதத்தைத்தழுவியிருந்த மக்களிடம் அழைத்துச் சென்றார். அவர்களிடம், “இவர் ஒரு கத்தோலிக்ககுரு. அபூர்வ வல்லமையுள்ள வர்” என்று அறிமுகப்படுத்தினார். சங். வால்ஷ் சுவாமியார் எழுந்து நின்று, கூடியிருந்த மக் களிடம், அந்நகர்ப்புறத்திலுள்ள கத்தோலிக்கருக்கு அவசியமான ஞானக்காரியங்களை கவனித்து, அவர்களை, ஞானஜீவியத்தில் போஷிக்கும்படியாக, தாம் அங்கு அனுப்பப்பட்ட தாகக் கூறினார். மேலும், கத்தோலிக்க திருச்சபை கற்பாறையின் மேல் கட்டப்பட்டது பற்றியும், உலகின் சகல மக்கள் மீதும் அதற்குள்ள உரிமை பற்றியும் விரிவாக பிரசங்கித்தார்; ஒவ்

வொருவருடைய அழியாத ஆத்துமத்தையும் மோட்ச கரை சேர்ப்பது, ஞான மேய்ப்பர் களான குருவானர்களுடைய தலைமையான கடமை என்றும் விவரமாக எடுத்துரைத்தார்.

சிறுமிகளுக்கென குறிக்கப்பட்ட இடத்தில் மார்த்தா அமர்ந்தபடி, குருவையே விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் நன்றி கூறி, அவர் விடைபெற்றுச் செல்கை யிலும், மார்த்தா தன் பார்வையைத் திருப்பவில்லை. குருவானவரும், சிறுமியை ஆசீர்வதித்து விட்டுச் சென்றார். அந்நிமிடத்திலிருந்துமார்த்தாளின் இருதயம் கத்தோலிக்க திருச்சபையை நாடியது. ஆனால், புதிதாக அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அவ்வளவு கவனமாக, அவளுடைய பெற்றோர் கவனித்துவந்தனர். புத்தகம் வாசிப்பதில் அவளுக்கு அதிக ஆவல் இருந்தது. கத்தோலிக்க வேத சத்தியங்கள் பற்றிய புத்தகம் எதுவும், அவளுடைய கண்ணில் படாதபடி, பார்த்துக் கொண்டனர். இருப்பினும், அவர்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அர்ச். மரிய மதலேனம்மாள் தேவாலயத்திற்கு, மார்த்தா தன் பெற்றோருக்குத் தெரியாமல் செல்வ தை வழக்கமாகக் கொண்டிருந்தாள். தனது பதித கோவிலில் மக்கள் எப்பொழுதும் பேசிக் கொண்டும், யாதொரு பக்தியும், ஆச்சாரமும் இன்றி, நடந்துகொள்வதையே இதுவரை பார்த்து வந்தமார்த்தாள், இந்த கத்தோலிக்க தேவாலயத்தில், எப்பொழுதும் மௌனம் அனுசரித்து, பீடத்தின் மத்தியில் இருக்கும் பரிசுத்த பேழையை மக்கள் மிகுந்த பக்திபற்றுத லுடன் உற்று நோக்கி ஜெபிப்பதையும், தாழ்ந்து பணிந்து ஆராதிப்பதையும், ஆச்சரியத்து டன் கவனித்தாள். கத்தோலிக்க தேவாலயங்களில் நிலவிய அமைதியும் பக்திமிகுந்த சூழ லும், அங்கு செல்லும்படி அவளைக் கவர்ந்திழுத்தது. தினமும்மாலையில் நடைபெறும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்திற்குச் செல்வாள். ஒரு மூலையில் ஒளிந்து இருந்து, மாபெரும் வசீகர எழிலுடனும் ஆடம்பரமான ஒளியுடனும் தேவாலயத்தின் பீடத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டி ருக்கும் திவ்ய சற்பிரசாத நாதரையே, மார்த்தா மிக ஆச்சரியத்துடன் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பாள். தங்கள் நேச ஆண்டவரை, எப்பொழுதும் இடைவிடாமல் ஆராதித்துக் கொண்டிருப்பதையே, நித்திய பேரின்பமாகக் கொண்டிருக்கும் மோட்சவாசிகளான சம் மனசுகளுடனும் அர்ச்சிஷ்டவர்களுடனும் சேர்ந்து, பூலோகவாசிகளும் திவ்ய சற்பிரசாத நாதரை ஆராதித்துக்கொண்டிருந்தனர்.

திவ்ய சற்பிரசாத நாதர், தன் இருதயத்தைக் கவர்ந்து விட்டதை, அப்பொழுது, அவள் உணர்ந்தாள். “பீடத்தின் மீது எழுந்தருளியிருப்பது, கடவுள் தான் என்று என் இருத யம் எனக்கு உணர்த்துகிறது. அதனால் தான், கத்தோலிக்கர்கள், தேவாலயப்பீடங்களில் எழுந் தருளியிருக்கும் தங்களுடைய திவ்ய கர்த்தரும் ஆத்தும் சிநேகிதருமான திவ்ய சேசுவுடன் சல்லாபிக்கும்படியாக, அடிக்கடி “தேவநற்கருணை சந்திப்பு” செய்து, அபரிமிதமான தேவ வரப்பிரசாங்களைப் பெற்றுச் செல்கின்றனர். அதன்வழியாக ஞான ஜீவியத்தின் உத்தமதனத் தை அவர்கள் எளிதில் அடைந்து கொள்கின்றனர். அவரைப் பற்றி, இன்னும் அதிகமாய் அறி வதற்கு ஆசிக்கிறேன்” என்று தனக்குள் சொல்வாள். ஆனால், எவ்விதம் ஆண்டவரை அறிவது? அதைப் பற்றி வெளியில் யாருடனும் பேச முடியாது. வழக்கம்போல் மற்றவருடன் பதித கோவிலுக்குச் செல்வாள். ஆனால், பதித வேதாகமத்தையே வழிபாட்டின் மையப்பொரு ளாகக் கொண்டதும், பக்தியற்றதும் அமைதியற்றதுமான அச்சூழலில், அவளால் ஜெபிக்க முடியவில்லை. அவளது இருதயமோ, கத்தோலிக்கு தேவாலயத்தையே நாடியது. ஆண்டுகள் பல கடந்தன. பிறருக்குத் தெரியாமலேயே, மார்த்தா கத்தோலிக்கு தேவாலயங்களுக்கு சென்று கொண்டிருந்தாள். “பரலோக பிதாவே! என்னை சத்திய வேதத்திற்குள் கொண்டு சேர்த்தருளும்” என்று அடிக்கடி ஜெபிப்பாள்.

மார்த்தாளுக்குத் திருமணம் முடிந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களில், கணவன் இறந்தான். இந்த சமயத்தில் அவள் கத்தோலிக்க வேதத்தில் சேர்வதற்கு, மிகவும் ஆசித்தாள். ஆனால், அதில் சேர்வதற்கு உதவுபவர்களை அவள் சந்திக்கவில்லை. ஒருநாள் அவள் தன் பிள்ளைகளுடன் நடந்து செல்கையில், அல்லெமனிநகரின் அதிமேற்றிராணியாரைப் பார்த்தாள். அவரைப் பார்த்தடன், அவளுக்கு, சங்.வால்ஷ் சுவாமி யாரின் ஞாபகம் வந்தது. நின்று அவரையே உற்றுப் பார்த்தாள். அதி மேற்றிராணியாரும் அவள் அருகில் வந்ததும் நின்று, அம்மா நான் உனக்கு செய்யக்கூடியது ஏதாவது உண்டா ? என்று கேட்டார். அதற்கு அவள், உணர்ச்சிவசப்பட்டவளாக எதுவும் பேசமுடியாமல், நான்

புராட்டஸ்டன்டு மதத்தவள் என்று மட்டுமே கூறினாள். அதைக் கேட்ட நல்ல ஞான மேய்ப் பர், புன்னகை புரிந்தவராக, அவளையும் அவளுடைய பிள்ளைகளையும் ஆசீர்வதித்து விட்டுச் சென்றார். அந்நேரமுதல், அவளிடம் புத்துணர்ச்சி ஏற்பட்டது. என்றுமில்லாதவிதமாக, தன் பால் ஈர்த்து வந்த கத்தோலிக்க திருச்சபையின் வேதவிசுவாச சத்தியத்திற்கு எதிராக, பதித சபையினர், அனேக தப்பறைகளைப் பரப்பி வந்ததையும் அவள் கேட்டாள். அவற்றை சட் டைபண்ணாமல், அவள் விசுவசித்ததெல்லாம், கத்தோலிக்க தேவாலயத்தின் மத்தியில் ஒரு பீடம் இருக்கிறது. அப்பீடத்திலுள்ள பெட்டகத்தில், கிறீஸ்து, தமது தேவசுபாவத்துடனும், மனித சுபாவத்துடனும் எழுந்தருளியிருக்கிறார் என்பதே!.திவ்ய சற்பிரசாத நாதரே, அவளைத் தம்பால் இழுத்துக்கொண்டிருந்தார்.

சங். வால்ஷ் சுவாமியாரைத் தவிர வேறு எந்த கத்தோலிக்க குருவையும், அவள் இது வரை சந்திக்கவில்லை. எந்த கத்தோலிக்க புத்தகத்தையும் படிக்கவுமில்லை. இரட்சணியம் அடைவதற்கு, ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று மாத்திரம் அவள் கேள்விப்பட்டிருந் தாள். இட்சணியம் அடைய வேண்டும், ஞானஸ்நானம் பெற வேண்டும் என்ற நினைவே அவளை எப்பொழுதும் ஆட்கொண்டிருந்து. பிள்ளைகள் இருவரையும் ஒருநாள், கத்தோலிக்க தேவாலயத்திற்குக்கூட்டிச் சென்றாள். கத்தோலிக்க தேவாலயத்தில், குருவானவர், அவளி டம்,” ஏதாவது தேவையா?” என்று கேட்டார். அதற்கு அவள்,”சுவாமி! என் மக்கள் இருவருக் கும் ஞானஸ்நானம் கொடுக்க முடியுமா?” என்று அச்சத்துடன், கேட்டாள். குருவானவர், அவளையும் பிள்ளைகளையும், தனது இல்லத்துக்குக் கூட்டிச் சென்று, அவளுடைய வரலாற் றைக் கேட்டறிந்தார். தேவ நற்கருணையில் எழுந்தருளியிருக்கும் திவ்ய சற்பிரசாதநாதரு டைய எல்லையில்லா நன்மைத்தனத்தை குறித்து ஆச்சரியமடைந்தவராக, திவ்ய சேசுவுக்கு நன்றி செலுத்தினார்.

பிள்ளைகள் மாத்திரம் ஞானஸ்நானம் பெற்றால், கத்தோலிக்க வேத சத்தியத்தில் அவர் களை வளர்ப்பது யார்? என்ற கேள்வி எழுந்தது. உடனே, மார்த்தாள்,” சுவாமி! நானும் ஞானஸ்நானம் வாங்கலாமா?” என்றாள். அதற்கு, குரு , “தாராளமாய் வாங்கலாம். நானே உன்னை ஞாஸ்நானத்திற்குத் தயாரிப்பேன்” என்று மகிழ்வுடன் பதிலளித்தார். அவரே, அவ ளுக்கு வேதசத்தியங்களைக் கற்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு, அவளும் பிள்ளைகளும் சத்திய திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவளைத் தம்பால் இழுத்து வந்த திவ்ய சற்பிரசாத நாதரை உட்கொள்ளும் பாக்கியமும் அவளுக்கும் அவளுடைய மக்களுக்கும் கிடைத்தது. தினமும் சர்வேசுரனுக்கு நன்றி செலுத்தி வந்தாள்..

Leave a comment