மகா பரிசுத்த ஜெபமாலையின் மகிமை

அநேக வருடங்களுக்கு முன், அயர்லாந்து நாட்டினர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் மேற்றிராணியாராக இருந்தார். அவர் ஒரு சமயம், ஓய்விற்காக தமது சொந்த நாடான அயர்லாந்து சென்றிருக்கையில், சில நண்பர்களுடன் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தார். அப்பொ ழுது, அவர் தம்முடைய ஜெபமாலையைக் காண்பித்தார். அது வெகு சாதாரணமானது. குறைந்த விலையுள்ளது. வெள்ளை மணிகள். ஆயிரம்பவுன் கொடுத்தாலும், இந்த ஜெபமாலை யை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். இதைப் பற்றிய வரலாறு ஒன்றுண்டு” என்றார். யாவரும் அதைக் கேட்க விரும்பினர். அவரும் அந்த வலாற்றைப் பின்வருமாறு கூறினார்: “அநேக ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அதோடு கொடிய கொள்ளை நோயும் சேர்ந்து, அநேக உயிர்களைக் கொண்டு சென்றது. அதே சமயம், அந்நியரான ஆங்கிலேயர் அயர்லாந்தின் கத்தோலிக்க மக்களை இம்சித்து கொடுமைப் படுத்தி வந்தனர். இந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் நம் நாட்டினரை வரவேற்றன.

நாட்டைவிட்டுச் செல்பவர்கள் புறப்படுமுன் உத்தரிய சுரூபம், ஜெபமாலை முதலிய பக்திக்கடுத்த பொருட்களை இங்குள்ள கன்னியாஸ்திரி மடங்களிலிருந்து வாங்கிச் செல்வார் கள். ஒருநாள் கப்பலொன்று அயர்லாந்தைவிட்டு ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டது.

கத்தோலிக்கன் ஒருவனும் அதே கப்பலில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றான். அவன் சில பக்தியற்ற மனிதர்களுடன் சேர்ந்து பழகுவதை வயோதிபர் கவனித்தார். அவர்களுடன் ஆடல் பாடல் களுக்கு அவன் சென்றான். எப்போதும், அவன், அவர்களோடே பேசிக் கொண்டிருப்பான். ஆஸ்திரேலியாவில் சேர்ந்ததும், அவர்களே, அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்கள். ஆனால் அவன் தன் வேதாப்பியாசத்தை விட்டுவிட வேண்டுமென வற்புறுத்தினார்கள். அதா வது கத்தோலிக்க வேத விசுவாசத்தைகைவிடும்படி அவனிடம் வற்புறுத்தினர். அதற்கு அவ னும் சம்மதித்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் கிழவனார், அவனை தேவாலயத்தில் தேடிப் பார்த்தார். அவனைக் காணோம்.

ஆண்டுகள் கடந்தன. வாலிபன், ஆஸ்திரேலியாவில் பெரிய பணக்காரனாக உயர்ந் தான். நகரின் முக்கியமான தெருவிலிருந்த ஒரு கடையின் சொந்தக்காரன் அவன். சொத்துக் களும் ஏராளமாக வாங்கினான். அவன் கத்தோலிக்கன் என்பதை அந்த வயோதிபரைத் தவிர வேறெவரும் அறியார். புரோட்டஸ்டான்டு பதித சபையைச் சேர்ந்த ஒருத்தியை அவன் திருமணம் செய்துகொண்டான். அவள் பிரியம் போல், தன் பிள்ளைகளை பதித மார்க்கத்திலே யே வளர்க்க விட்டுவிட்டான். இறுதியாக அவனுக்கு நோய் வந்தது. ஒருநாள் அந்த வயோ திபர் பணக்காரனது வீட்டுப்பக்கமாய் சென்றார். பலர் வீட்டுக்குள் போவதும் வருவதுமாய் இருந்தனர். காரணத்தை விசாரித்தார். பணக்காரனுக்கு சுகமில்லை. வைத்தியர்கள் யாவரும் கைவிட்டார்கள் என்று அறிந்தார். அவனுடைய ஆத்துமத்தை எப்படியாவது காப்பாற்றத் தீர்மானித்து, அவன் வீட்டிற்குள் நுழைந்தார். நோயாளி படுத்திருந்த அறைக்குச் சென்று, அவனருகில் முழந்தாளிட்டார்.

அவனுக்காக ஜெபமாலை சொல்லி ஒப்புக் கொடுத்தார். பின், தான் யாரென்று முத லில் தெரிவித்து, “உன் தாயும் தந்தையும் உன்னை நல்ல கத்தோலிக்கனாக வளர்த்தார்களே! நீ இந்த நிலையில் செத்தால், உன் ஆத்துமத்தை, நித்தியத்திற்கும் இழந்துவிடுவாயே! உன் அம் மாவிற்கும் அப்பாவிற்கும், அது எவ்வளவு வேதனையைத் தரும் என்று சிந்தித்துப் பார்த்தா யா? கத்தோலிக்க குருவானவர் ஒருவரை, அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார். இதைக் கேட்டவுடன், அவன் உணர்ச்சி பெருக்கத்துடன் சப்தமிட்டு அழுதான். உலக செல்வத்திற் காக, விலை உயர்ந்ததும், நித்திய பேரின்ப மோட்ச பாக்கியத்தை அளிக்க வல்லதுமான கத் தோலிக்க வேதவிசுவாசத்தைக் கைவிட்டதையும், வேதகடமைகளை அனுசரியாமல் இருந்த தையும் நினைத்து அழுதான். பின்னர், அவன் வயோதிபரிடம், ” ஐயா! மிக்க நன்றி, நல்லது விரைவில் கூட்டி வாருங்கள்” என கூறினான்.

உடனே வயோதிபர், பங்கு சுவாமியாரைத் தேடிச் சென்றார். அங்கே பங்கு சுவாமி யாரும் மற்ற குருக்களும் வெளியே சென்றிருந்தார்கள். அவர் கொண்ட கவலையைக் கவ னித்த வேலைக்காரன், “ஐயா, அதிக அவசரம் என்றால் மேற்றிராணியாரை அழைத்து வருகி றேன்” என்றான். சிறிது நேரத்தில் மேற்றிராணியாருடன் வந்தான். விஷயத்தைச் சொல்லி, “விரைவில் வாருங்கள், ஆண்டவரே! நோயாளிசாகுமுன் போய்ச் சேர வேண்டும்” என்று வயோதிபர் வற்புறுத்தினார். ஆனால், மேற்றிராணியார், அதற்கு ஓர் நிபந்தனையைக் கூறினார்: “ஒரு புரோட்டஸ்டான்டு பாதிரியாரும், ஒரு போலீஸ் அதிகாரியும் என்னுடன் கூட வர வேண்டும். அழைத்து வந்தால், உடனே போகலாம்” என்று சொல்லிவிட்டார். அவனுடைய ஆத்துமத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று தீர்மானித்திருந்த வயோதிபர் சிரமத்தை கவனியாமல், பல இடங்களுக்கு சென்று பேசி, மேற்றிராணியார் கேட்ட

இருவரையும் அழைத்து வந்தார்.

நால்வருமாகப் புறப்பட்டார்கள். மேற்றிராணியார் எதிர்பார்த்தபடியே, நோயா ளியின் வீட்டினுள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. அதாவது, பதித புராட்டஸ்டான்டு மார்க்கத்தில் உட்பட்டிருந்த பணக்காரனுடைய ஆத்துமத்தை, பசாசு அவ்வளவு எளிதாக கத்தோலிக்க மேற்றிராணியாரிடம் விட்டுவிட மனமில்லாமல், புராட்டஸ்டான்டு பதிதரை, அவருக்கு எதிராக குழப்பம் செய்யும்படி துாண்டியது. உடனே, மேற்றிராணியார், அருகி லிருந்த போலீஸ் அதிகாரியைப் பார்த்து, “ஐயா, இந்த வீட்டின் சொந்தக்காரன், என்னைக் கண்டு பேச விரும்புகிறான். இதோ இங்கு நிற்பவர்கள் என்னைத் தடுக்கின்றனர். நீர் உமது கடமையை நிறைவேற்றும்” என்றார். போலீஸ் பாதுகாப்போடு , மேற்றிராணியார், இருவரு டனும், வீட்டிற்குள் நுழைந்தார். நோயாளியிடம் சென்று, “நண்பா, இவர் ஒரு புரோட் டஸ்டான்டு மத குரு. நான் கத்தோலிக்க மேற்றிராணியார். எங்கள் இருவரில், நீ மோட்சம் செல்வதற்கு, யாருடைய உதவி உனக்கு வேண்டும்?” என்று வினவினார். “ஆண்டவரே! நீங் கள் தான் வேண்டும், நீங்கள் தான் வேண்டும்” என்று சாகக் கிடந்தவன் பதறிச் சொன்னான். “நண்பர்களே, நோயாளி சொன்னதைக் கேட்டீர்களல்லவா? எல்லோரும் சற்று வெளியே போங்கள். நான் இவனுடன் தனியே பேச வேண்டும்” என மேற்றிராணியார் அங்குக் கூடி யிருந்தவர்களிடத்தில் கூறினார். உடனே அங்கிருந்த சகலரும் வெளியேறினர். பல ஆண்டு களாக திவ்ய கத்தோலிக்க வேதத்தை அனுசரியாமல், சர்வேசுரனை மறந்திருந்த பாவி அன்று, உத்தம மனஸ்தாபத்துடன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, கடவுளுடன் சமாதான மானான். அவஸ்தை பூசுதல் பெற்றுக் கொண்டான்.

எல்லாம் முடிந்ததும், தம்பி, இத்தனை காலமாக நீ நேச ஆண்டவரை விட்டு அகன்று திரிந்து, கடைசியாக அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறாய். இது உனக்கு மிகப் பெரிய பாக்கி யமே! நீ , நம் நேச இரட்சகரை மறந்தாலும், அவர் உன்னை மறவாமல் தம்மிடம் திரும்ப சேர்த்துக் கொண்டார். அதற்கு, இதோ இந்த வயோதிபரும், பெரிதும் உதவியிருக்கிறார். அவ ருக்கு நீயும், நானும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆத்தும் தாகம் கொண்ட ஒவ்வொரு கத்தோலிக்கரும், இத்தகைய பிறர் சிநேகத்துடன் ஜீவித்தால், எவ்வளவு சிதறிப் போகும் ஆத்துமங்களைக் காப்பற்றலாம்! இந்த வரத்தைப் பெறுவதற்கு, உன் வாழ்நாளில் நீ ஏதாவது நன்மை செய்திருக்க வேண்டும். அது என்ன?” என்று மேற்றிராணியார் கேட் டார். நோயாளி தன் தலையணையின் கீழ் சற்று நேரம், தேடினான். ஒரு ஜெபமாலை அங்கிருந் தது. அதை எடுத்துக் காண்பித்து,” சுவாமி, நான் பெரிய துஷ்டன்; பெரிய பாவி! நன்மை ஒன் றும் நான் செய்ததில்லை. நான் அயர்லாந்திலிருந்து புறப்படுவதற்குமுன், ஒருகன்னியாஸ்திரி, இதை எனக்குக் கொடுத்து, இந்த ஜெபமாலையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் ஒரு மங்களவார்த்தை ஜெபமாவது சொல்வதாக வாக்களிக்கும்படி என்னிடம் கேட்டார்கள். நானும், அவ்விதமே, வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியில், இது வரை, நான் தவறா மல் நடந்திருக்கிறேன். இதைத் தவிர, வேறு நல்லது எதுவும் நான் செய்ததில்லை” என்று கூறி னான். அந்த ஜெபமாலையைத் தமக்குத் தரும்படி மேற்றிராணியார், அவனிடம் கேட்டார். தன் மரணத்துக்குப் பின் அவர் அதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்று, கூறிய படி அவன், தனக்கு மோட்சத்தை பெற்றுத்தரப்போகும் அத்திருப் பண்டத்தை பக்தியோடு முத்திசெய்து, ஆசையோடு கைகளில் இறுகப் பற்றிக்கொண்டு, மங்கள வார்த்தை ஜெபத் தை, கண்களில் நீர்மல்க ஜெபித்தான். அப்போது, அவன் உயிர் பிரிந்தது. அந்த ஜெபமாலை யை எடுத்துவந்த மேற்றிராணியார், அதைப் பெருந்திரவியமாகக் கருதி வந்தார். சாகுமுன், அவருக்குப்பின், அதே மேற்றிராசனத்தின் மேற்றிராணியாராக பதவி ஏற்க வந்த எனக்கு இதைக் கொடுத்துச் சென்றார்” என்று கதையை முடித்தார். 1

மகா பரிசுத்த ஜெபமாலை இராக்கினியே! வாழ்க!

அர்ச். அமலோற்பவ மாமரியே! வாழ்க!

யூதித் பாட்டியின் தேவசிநேகம்

பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஏழை வயோதிபர்களுக் கென்று கட்டப்பட்டிருந்த விடுதியிலிருந்த தேவாலயத்தின் பீடத்திலிருந்த வாடா விளக்கு, மங்கலாய் எரிந்து, அன்புக் கைதியாக திவ்யசற்பிரசாதப்பேழையில் எழுந்தருளியி ருக்கும் சர்வாதி கர்த்தருக்குக் காவல் புரிந்து கொண்டிருந்தது. இருள் பரவியிருந்த அந்நே ரத்தில் அங்கு வேறு வெளிச்சமே இல்லை. புதிதாக அன்று அங்கு வந்திருந்த சங். இஸபெல் கன்னியாஸ்திரி அமைதியாக கோவிலுக்குள் வந்து, முழங்காலிலிருந்து, சில வினாடி ஜெபித் தார்கள். தனியே இருப்பதாக நினைத்த இஸபேல் சகோதரியின் கண்கள், இருளுக்குப் பழகிய பின்னரே, வேறு ஓர் ஆளும் அங்கிருப்பதாக உணர்ந்தது. பீடத்தின் அருகில் ஓர் மூலையில் அந்த உருவம் குனிந்திருந்தது. அவள் கிழவி. முழந்தாளிட்டிருந்தாள். இரவு படுக்கும் நேரத் திற்கான மணியடித்தவுடன், மெதுவாகவும் சிரமத்துடனும் எழுந்து, தன் நேச ஆண்டவர் குடியிருக்கும் தேவநற்கருணைப் பேழையை கடைசி முறையாக அன்புடன் நோக்கிவிட்டு, அமைதியாக கோவிலை விட்டு வெளியேறினாள்.

இஸபெல் கன்னியாஸ்திரி அநேக ஆண்டுகளாக பல்வேறு மடங்களிலிருந்து ஏழை வயோதிபர்களைப் பராமரித்து வந்தவர்கள்; திவ்ய நற்கருணைப் பேழைக்குமுன் நெடுநேரம் செலவழித்த பல பக்தியுள்ள வயோதிகர்களை அறிவார்கள். புது இடத்துக்கு வந்த நாளிலி

ருந்து, அந்த கிழவிமேல் அவர்களுக்கிருந்த மதிப்பு அதிகரித்தது. கிழவி அநேகமாய் எப்போ தும் தேவாலயத்திலேயே இருந்தாள். மறைந்திருந்த தன் கடவுளை, இரட்சகரை, சந்திக்கும் படி, இரவிலும் பகலிலும் இடையிடையே இஸபெல் சகோதரி கோவிலுக்குப் போவார்கள். அந்த சமயங்களிலெல்லாம் கிழவி கோவிலில் இருப்பாள். நாளடைவில், சகோதரி கோவி லுக்கு வந்ததும், முதலில் திவ்யற்கருணைப் பேழையை நோக்கி ஆராதித்து விட்டு, கிழவி முழங்காலிலிருந்து ஜெபிக்கும் வழக்கமான இடத்தையே நோக்குவார்கள். கிழவியின் கண் கள் , மகாப் பரிசுத்த பேழையின்கதவின் மேல் இருக்கும். கையில் ஜெபமாலையப் பிடித்து, ஜெபித்துக் கொண்டிருப்பாள்.

அந்தக் கிழவி யாரென சங். இஸபெல் ஒருநாள் விசாரித்தார்கள். அவளுடைய பெயர் யூதித் மர்பி. அவளுடைய கணவனும் மூன்று மக்களும் ஆறு ஆண்டுகளுக்குமுன் காய்ச் சல் கண்டு இறந்தார்கள். அதிலிருந்து அவள் இங்கு வந்து வசிக்கிறாள். வெகு பக்தியுள்ளவள், என்று சங். ரோஸ் கன்னியாஸ்திரி மொழிந்தார்கள். சகோதரி நான் அந்த பாட்டியுடன் பேச ஆசிக்கிறேன். சேசுவின் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் அவள் தலை குனிகிறாள். அதிலிருந்து, அவள் ஜெபமாலையை வெகு விரைவாகச் சொல்கிறாள் என்று நினைக்கிறேன். அவ்வளவு விரைவாகச் சொல்லக் கூடாது. இதைப் பற்றி பாட்டியிடம் நான் சொல்லப் போகிறேன். என இஸபெல் கூறியதும், சொல்லுங்கள், அவளைப் போல் ஜெபிக்கும் வரத்தை உங்களுக்குத் தரும்படி ஆண்டவரை மன்றாடுங்கள், என ரோஸ் சகோதரி சொல்லிச் சென்றார்கள்.

மறுநாள் இஸபெல் சகோதரி, கிழவியை அணுகி, பாட்டி கோவிலில் எப்பொழுதும் ஜெபமாலையா சொல்கிறீர்கள்? என்றாள். அதற்கு, அவள் ஒன்றும் பதிலளிக்கவில்லை. தலையை வெறுமனே அசைத்தாள். அருள் நிறை மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறீர்களா? என்று கேட்டபோது, இல்லை என்று காட்ட அவள் தன் தலையை அசைத்தாளேயொழிய, வார்த்தை ஒன்றும் வெளிவரவில்லை. தான் பேசுவது அவளுக்குப் பிரியமில்லை என நினைத்து, கன்னியாஸ்திரி, அங்கிருந்து போகையில், தயவு செய்து எனக்காகவும் ஜெபியுங்கள் என்று சொல்லிச் சென்றாள். காலையிலிருந்து இரவு வரை, யாதொரு உதவியும் இன்றி, முழந்தாளிட் டிருப்பது எளிதல்ல. நான் ஒரு மணிநேரம் முழந்தாளிட்டிருந்தால் உடலெல்லாம் நோகிறது. கிழவியோ பல மணி நேரமாக அசையாமல் பார்வையை, வேறெங்கும் திருப்பாமல், முழங் காலிலிருந்து ஜெபிக்கிறாளே, என இஸபெல் சகோதரி வியப்புற்றார்கள். யூதித், அது தான் கிழவியின் பெயர். யூதித் பாட்டி, இராப்பகலாய் தன் நேச சேசுவிடம் என்ன பேசுவார்கள் என்று இஸபெல் கன்னியாஸ்திரி சிந்தித்துப் பார்த்தார்கள். ஒரு நாள் இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்தது.

திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்துக்கு முன் சங்.இஸபெல், தேவாலயத்திற்குள் போன போது, கிழவி பேசினது என்ன என்று அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அவள் வழக்கமாக முழந்தாளிடும் இடத்திற்கு அருகில் இருந்த திரைக்குப்பின், கன்னியாஸ் திரி போய் முழந்தாளிட்டார்கள். சில நிமிடங்களுக்குப் பின் யூதித் பாட்டி வந்தார்கள். தான் மாத்திரம் கோவிலில் தனியே இருப்பதாக, நினைத்துக் கொண்டு, முழங்காலிலிருந்து, தரையை முத்தமிட்டு ,”திவ்ய சேசுவே! இதோ நான் திரும்பவும் வந்து விட்டேன்” என்றாள். பிறகு வழக்கமான தன் ஆராதனை கீதத்தை ஆரம்பித்து, “ஓ! நேச சேசுவே! கோடான கோடி வாழ்த்துதல் உமக்கு உண்டாகக் கடவது’ என்னும் ஜெபத்தை பத்து முறை, ஐம்பது முறை நூறு முறை சொல்லி தன் ஜெபமாலை மணிகளை உருட்டி ஜெபித்தார்கள். யாராவது கோவிலினுள் நுழைந்தால், தனது குரலைத்தாழத்திக் கொள்வார்கள். தனியே விடப்பட்டி ருப்பதாக உணர்ந்ததும், சிறிது சத்தமாய் சொல்வார்கள். திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் முடிந்த பின்னும் யூதித் பாட்டி அங்கிருந்தார்கள். படுக்கைக்குச் செல்ல வேண்டிய நேரமா யிற்று என்று அறிவிக்கும் மணியடித்ததும், அவள் எழுந்து திவ்ய நற்கருணைப் பெட்டியை அன்புடன் நோக்கி,”சேசுவே, என் கண்மணியே, நான் போய் வருகிறேன். மல்லமோன் ஊரி னளான யூதித் மர்பி கிழவியை மறந்து போகாதேயும். சேசுவே! இரவு வந்தனம். அதிகாலை யில் உம்மிடம் திரும்ப வருவேன்” என்றனள். பின் மெதுவாக கதவை நோக்கி, ” சேசுவே, இன்னொரு முறை, பெரிய மாலை வணக்கம்” என்று மொழிந்தாள்.

இஸபெல் சகோதரி கடைசியாக, உண்மையை அறிந்தார்கள். கிழவி திவ்ய சேசுவை நேசித்தாள். சேசுநாதர் சுவாமி, பீடத்தில் மறைந்து வசித்த போதிலும், தன் கண்முன் அவர் உயிருடன் ஜீவிப்பதாக, அவள் முழு இருதயத்துடன் விசுவசித்து, அதன்படி நடந்தாள் என்பதை சங். இஸபெல் கன்னியாஸ்திரி அறிந்தனள். மாதங்கள் பல கடந்தன. ஓரிரவு படுக்கைக்கு சகலரையும் அழைக்கும் மணி அடித்தாயிற்று. யூதித் பாட்டி, படுக்கைய றைக்குச் செல்லவில்லை. கோவிலுக்கு எல்லோரும் விரைந்தனர். அவள், ஒரு மூலையில் சுருட்டி மடக்கி அறிவின்றிக் கிடந்தாள். சேசு அவளைத் தம்மிடம் அழைத்துக் கொண்டார் என்று எல்லோரும் கருதினார்கள். அவளைத் தரையிலிருந்து எழுப்புகையில், இன்னும் உயிர் இருந்தது. மருத்துவமனைக்கு அவளைத் தூக்கிச் சென்றனர். சுயநினைவு வந்தது. தான் பிரமா ணிக்கமாய் நேசித்து வந்த தன் நேச ஆண்டவரை, திவ்ய சேசுவை, கடைசி முறையாக, பரலோக பயணத்தின் வழித்துணையாக உட்கொண்டாள். அவள் நோய்வாய்ப் படுத்திருக் கையிலும் ஒரேஜெபம்:”ஓ! நேசசேசுவே! உமக்குக் கோடான கோடி வாழ்த்துதல். மல்ல மோன் ஊரினளான யூதித் மர்பி கிழவியை மறந்துவிடாதேயும். திவ்ய சேசுவே! கண்மணி யே! போய் வருகிறேன். அதிகாலையில் உம்மிடம் திரும்பி வருவேன்” என ஓயாது சொல் லிக் கொண்டிருந்தாள். ஆம், அவள் சொன்னது போல், அதிகாலையில் அவள், அவரிடம் திரும்பிச் சென்றனள். மோட்சத்திலிருக்கும் சகல பரிசுத்தவான்களுடன் சேர்ந்து, நித்தியத் திற்கும் அவரை வாழ்த்தும்படி மறுநாள் அதிகாலையில் அவளது ஆத்துமம், தனது ஏக நேச ரை நோக்கி பறந்து சென்றது..

https://tamilcatholicprayers.blogspot.com/

பதிதப் பெண், சத்திய வேதத்தில் சேர்ந்த புதுமை

பல வருடங்களுக்கு முன்பு, அமெரிக்க ஐக்கியநாட்டில், மார்த்தா என்ற ஓர் புராட்டஸ்டன்டு சிறுமி இருந்தாள். அவளுடைய தந்தை ஒரு பதித சபையின் பாதிரியாராக இருந் தார். சிறுமி எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பாள். தந்தைக்கு எப்பொழுதும் அவள் மீது பிரியம். ஒருநாள் தெருவின் கடைசியிலிருந்து தன் தந்தை ஒரு அந்நியருடன் நடந்து வருவ தைக் கண்டாள். உடனே, தந்தையிடம் ஓ டினாள். அவர் தன்னுடன் வந்த அந்நியரிடம், “இவள் என் மகள் மார்த்தா ” என்றார். மகளிடம்,” இவர் சங். வால்ஷ் சுவாமியார். ஒரு கத்தோ லிக்க குருவானவர்” என்று கூறி அந்நியரை அறிமுகம் செய்தார். குருவின் கையைகுலுக்கிக் கொண்டே, மார்த்தா, அவருடைய முகத்தை, இமை மூடாமல், பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளுடைய உடல் சிலிர்த்தது. முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் ஒன்றும் பேசவில்லை. குருவானவர் கறுப்பு அங்கி அணிந்திருந்தார். உயரமான உருவம். அவருடைய கனிவான பார்வை, சிறுமியின், இருதயத்தை ஊடுருவியது. தலைகுனிந்து அவருக்கு அவள் வணக்கம் செலுத்தினாள். அவருடைய தோற்றம் சிறுமியின் மனதை விட்டு அகலவில்லை.

குருவானவரை, பதித பாதிரியார், தன்னுடைய பதிதத்தைத்தழுவியிருந்த மக்களிடம் அழைத்துச் சென்றார். அவர்களிடம், “இவர் ஒரு கத்தோலிக்ககுரு. அபூர்வ வல்லமையுள்ள வர்” என்று அறிமுகப்படுத்தினார். சங். வால்ஷ் சுவாமியார் எழுந்து நின்று, கூடியிருந்த மக் களிடம், அந்நகர்ப்புறத்திலுள்ள கத்தோலிக்கருக்கு அவசியமான ஞானக்காரியங்களை கவனித்து, அவர்களை, ஞானஜீவியத்தில் போஷிக்கும்படியாக, தாம் அங்கு அனுப்பப்பட்ட தாகக் கூறினார். மேலும், கத்தோலிக்க திருச்சபை கற்பாறையின் மேல் கட்டப்பட்டது பற்றியும், உலகின் சகல மக்கள் மீதும் அதற்குள்ள உரிமை பற்றியும் விரிவாக பிரசங்கித்தார்; ஒவ்

வொருவருடைய அழியாத ஆத்துமத்தையும் மோட்ச கரை சேர்ப்பது, ஞான மேய்ப்பர் களான குருவானர்களுடைய தலைமையான கடமை என்றும் விவரமாக எடுத்துரைத்தார்.

சிறுமிகளுக்கென குறிக்கப்பட்ட இடத்தில் மார்த்தா அமர்ந்தபடி, குருவையே விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் நன்றி கூறி, அவர் விடைபெற்றுச் செல்கை யிலும், மார்த்தா தன் பார்வையைத் திருப்பவில்லை. குருவானவரும், சிறுமியை ஆசீர்வதித்து விட்டுச் சென்றார். அந்நிமிடத்திலிருந்துமார்த்தாளின் இருதயம் கத்தோலிக்க திருச்சபையை நாடியது. ஆனால், புதிதாக அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அவ்வளவு கவனமாக, அவளுடைய பெற்றோர் கவனித்துவந்தனர். புத்தகம் வாசிப்பதில் அவளுக்கு அதிக ஆவல் இருந்தது. கத்தோலிக்க வேத சத்தியங்கள் பற்றிய புத்தகம் எதுவும், அவளுடைய கண்ணில் படாதபடி, பார்த்துக் கொண்டனர். இருப்பினும், அவர்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அர்ச். மரிய மதலேனம்மாள் தேவாலயத்திற்கு, மார்த்தா தன் பெற்றோருக்குத் தெரியாமல் செல்வ தை வழக்கமாகக் கொண்டிருந்தாள். தனது பதித கோவிலில் மக்கள் எப்பொழுதும் பேசிக் கொண்டும், யாதொரு பக்தியும், ஆச்சாரமும் இன்றி, நடந்துகொள்வதையே இதுவரை பார்த்து வந்தமார்த்தாள், இந்த கத்தோலிக்க தேவாலயத்தில், எப்பொழுதும் மௌனம் அனுசரித்து, பீடத்தின் மத்தியில் இருக்கும் பரிசுத்த பேழையை மக்கள் மிகுந்த பக்திபற்றுத லுடன் உற்று நோக்கி ஜெபிப்பதையும், தாழ்ந்து பணிந்து ஆராதிப்பதையும், ஆச்சரியத்து டன் கவனித்தாள். கத்தோலிக்க தேவாலயங்களில் நிலவிய அமைதியும் பக்திமிகுந்த சூழ லும், அங்கு செல்லும்படி அவளைக் கவர்ந்திழுத்தது. தினமும்மாலையில் நடைபெறும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்திற்குச் செல்வாள். ஒரு மூலையில் ஒளிந்து இருந்து, மாபெரும் வசீகர எழிலுடனும் ஆடம்பரமான ஒளியுடனும் தேவாலயத்தின் பீடத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டி ருக்கும் திவ்ய சற்பிரசாத நாதரையே, மார்த்தா மிக ஆச்சரியத்துடன் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பாள். தங்கள் நேச ஆண்டவரை, எப்பொழுதும் இடைவிடாமல் ஆராதித்துக் கொண்டிருப்பதையே, நித்திய பேரின்பமாகக் கொண்டிருக்கும் மோட்சவாசிகளான சம் மனசுகளுடனும் அர்ச்சிஷ்டவர்களுடனும் சேர்ந்து, பூலோகவாசிகளும் திவ்ய சற்பிரசாத நாதரை ஆராதித்துக்கொண்டிருந்தனர்.

திவ்ய சற்பிரசாத நாதர், தன் இருதயத்தைக் கவர்ந்து விட்டதை, அப்பொழுது, அவள் உணர்ந்தாள். “பீடத்தின் மீது எழுந்தருளியிருப்பது, கடவுள் தான் என்று என் இருத யம் எனக்கு உணர்த்துகிறது. அதனால் தான், கத்தோலிக்கர்கள், தேவாலயப்பீடங்களில் எழுந் தருளியிருக்கும் தங்களுடைய திவ்ய கர்த்தரும் ஆத்தும் சிநேகிதருமான திவ்ய சேசுவுடன் சல்லாபிக்கும்படியாக, அடிக்கடி “தேவநற்கருணை சந்திப்பு” செய்து, அபரிமிதமான தேவ வரப்பிரசாங்களைப் பெற்றுச் செல்கின்றனர். அதன்வழியாக ஞான ஜீவியத்தின் உத்தமதனத் தை அவர்கள் எளிதில் அடைந்து கொள்கின்றனர். அவரைப் பற்றி, இன்னும் அதிகமாய் அறி வதற்கு ஆசிக்கிறேன்” என்று தனக்குள் சொல்வாள். ஆனால், எவ்விதம் ஆண்டவரை அறிவது? அதைப் பற்றி வெளியில் யாருடனும் பேச முடியாது. வழக்கம்போல் மற்றவருடன் பதித கோவிலுக்குச் செல்வாள். ஆனால், பதித வேதாகமத்தையே வழிபாட்டின் மையப்பொரு ளாகக் கொண்டதும், பக்தியற்றதும் அமைதியற்றதுமான அச்சூழலில், அவளால் ஜெபிக்க முடியவில்லை. அவளது இருதயமோ, கத்தோலிக்கு தேவாலயத்தையே நாடியது. ஆண்டுகள் பல கடந்தன. பிறருக்குத் தெரியாமலேயே, மார்த்தா கத்தோலிக்கு தேவாலயங்களுக்கு சென்று கொண்டிருந்தாள். “பரலோக பிதாவே! என்னை சத்திய வேதத்திற்குள் கொண்டு சேர்த்தருளும்” என்று அடிக்கடி ஜெபிப்பாள்.

மார்த்தாளுக்குத் திருமணம் முடிந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களில், கணவன் இறந்தான். இந்த சமயத்தில் அவள் கத்தோலிக்க வேதத்தில் சேர்வதற்கு, மிகவும் ஆசித்தாள். ஆனால், அதில் சேர்வதற்கு உதவுபவர்களை அவள் சந்திக்கவில்லை. ஒருநாள் அவள் தன் பிள்ளைகளுடன் நடந்து செல்கையில், அல்லெமனிநகரின் அதிமேற்றிராணியாரைப் பார்த்தாள். அவரைப் பார்த்தடன், அவளுக்கு, சங்.வால்ஷ் சுவாமி யாரின் ஞாபகம் வந்தது. நின்று அவரையே உற்றுப் பார்த்தாள். அதி மேற்றிராணியாரும் அவள் அருகில் வந்ததும் நின்று, அம்மா நான் உனக்கு செய்யக்கூடியது ஏதாவது உண்டா ? என்று கேட்டார். அதற்கு அவள், உணர்ச்சிவசப்பட்டவளாக எதுவும் பேசமுடியாமல், நான்

புராட்டஸ்டன்டு மதத்தவள் என்று மட்டுமே கூறினாள். அதைக் கேட்ட நல்ல ஞான மேய்ப் பர், புன்னகை புரிந்தவராக, அவளையும் அவளுடைய பிள்ளைகளையும் ஆசீர்வதித்து விட்டுச் சென்றார். அந்நேரமுதல், அவளிடம் புத்துணர்ச்சி ஏற்பட்டது. என்றுமில்லாதவிதமாக, தன் பால் ஈர்த்து வந்த கத்தோலிக்க திருச்சபையின் வேதவிசுவாச சத்தியத்திற்கு எதிராக, பதித சபையினர், அனேக தப்பறைகளைப் பரப்பி வந்ததையும் அவள் கேட்டாள். அவற்றை சட் டைபண்ணாமல், அவள் விசுவசித்ததெல்லாம், கத்தோலிக்க தேவாலயத்தின் மத்தியில் ஒரு பீடம் இருக்கிறது. அப்பீடத்திலுள்ள பெட்டகத்தில், கிறீஸ்து, தமது தேவசுபாவத்துடனும், மனித சுபாவத்துடனும் எழுந்தருளியிருக்கிறார் என்பதே!.திவ்ய சற்பிரசாத நாதரே, அவளைத் தம்பால் இழுத்துக்கொண்டிருந்தார்.

சங். வால்ஷ் சுவாமியாரைத் தவிர வேறு எந்த கத்தோலிக்க குருவையும், அவள் இது வரை சந்திக்கவில்லை. எந்த கத்தோலிக்க புத்தகத்தையும் படிக்கவுமில்லை. இரட்சணியம் அடைவதற்கு, ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று மாத்திரம் அவள் கேள்விப்பட்டிருந் தாள். இட்சணியம் அடைய வேண்டும், ஞானஸ்நானம் பெற வேண்டும் என்ற நினைவே அவளை எப்பொழுதும் ஆட்கொண்டிருந்து. பிள்ளைகள் இருவரையும் ஒருநாள், கத்தோலிக்க தேவாலயத்திற்குக்கூட்டிச் சென்றாள். கத்தோலிக்க தேவாலயத்தில், குருவானவர், அவளி டம்,” ஏதாவது தேவையா?” என்று கேட்டார். அதற்கு அவள்,”சுவாமி! என் மக்கள் இருவருக் கும் ஞானஸ்நானம் கொடுக்க முடியுமா?” என்று அச்சத்துடன், கேட்டாள். குருவானவர், அவளையும் பிள்ளைகளையும், தனது இல்லத்துக்குக் கூட்டிச் சென்று, அவளுடைய வரலாற் றைக் கேட்டறிந்தார். தேவ நற்கருணையில் எழுந்தருளியிருக்கும் திவ்ய சற்பிரசாதநாதரு டைய எல்லையில்லா நன்மைத்தனத்தை குறித்து ஆச்சரியமடைந்தவராக, திவ்ய சேசுவுக்கு நன்றி செலுத்தினார்.

பிள்ளைகள் மாத்திரம் ஞானஸ்நானம் பெற்றால், கத்தோலிக்க வேத சத்தியத்தில் அவர் களை வளர்ப்பது யார்? என்ற கேள்வி எழுந்தது. உடனே, மார்த்தாள்,” சுவாமி! நானும் ஞானஸ்நானம் வாங்கலாமா?” என்றாள். அதற்கு, குரு , “தாராளமாய் வாங்கலாம். நானே உன்னை ஞாஸ்நானத்திற்குத் தயாரிப்பேன்” என்று மகிழ்வுடன் பதிலளித்தார். அவரே, அவ ளுக்கு வேதசத்தியங்களைக் கற்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு, அவளும் பிள்ளைகளும் சத்திய திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவளைத் தம்பால் இழுத்து வந்த திவ்ய சற்பிரசாத நாதரை உட்கொள்ளும் பாக்கியமும் அவளுக்கும் அவளுடைய மக்களுக்கும் கிடைத்தது. தினமும் சர்வேசுரனுக்கு நன்றி செலுத்தி வந்தாள்..