மகா பரிசுத்த ஜெபமாலையின் மகிமை

அநேக வருடங்களுக்கு முன், அயர்லாந்து நாட்டினர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் மேற்றிராணியாராக இருந்தார். அவர் ஒரு சமயம், ஓய்விற்காக தமது சொந்த நாடான அயர்லாந்து சென்றிருக்கையில், சில நண்பர்களுடன் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தார். அப்பொ ழுது, அவர் தம்முடைய ஜெபமாலையைக் காண்பித்தார். அது வெகு சாதாரணமானது. குறைந்த விலையுள்ளது. வெள்ளை மணிகள். ஆயிரம்பவுன் கொடுத்தாலும், இந்த ஜெபமாலை யை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். இதைப் பற்றிய வரலாறு ஒன்றுண்டு” என்றார். யாவரும் அதைக் கேட்க விரும்பினர். அவரும் அந்த வலாற்றைப் பின்வருமாறு கூறினார்: “அநேக ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அதோடு கொடிய கொள்ளை நோயும் சேர்ந்து, அநேக உயிர்களைக் கொண்டு சென்றது. அதே சமயம், அந்நியரான ஆங்கிலேயர் அயர்லாந்தின் கத்தோலிக்க மக்களை இம்சித்து கொடுமைப் படுத்தி வந்தனர். இந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் நம் நாட்டினரை வரவேற்றன.

நாட்டைவிட்டுச் செல்பவர்கள் புறப்படுமுன் உத்தரிய சுரூபம், ஜெபமாலை முதலிய பக்திக்கடுத்த பொருட்களை இங்குள்ள கன்னியாஸ்திரி மடங்களிலிருந்து வாங்கிச் செல்வார் கள். ஒருநாள் கப்பலொன்று அயர்லாந்தைவிட்டு ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டது.

கத்தோலிக்கன் ஒருவனும் அதே கப்பலில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றான். அவன் சில பக்தியற்ற மனிதர்களுடன் சேர்ந்து பழகுவதை வயோதிபர் கவனித்தார். அவர்களுடன் ஆடல் பாடல் களுக்கு அவன் சென்றான். எப்போதும், அவன், அவர்களோடே பேசிக் கொண்டிருப்பான். ஆஸ்திரேலியாவில் சேர்ந்ததும், அவர்களே, அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்கள். ஆனால் அவன் தன் வேதாப்பியாசத்தை விட்டுவிட வேண்டுமென வற்புறுத்தினார்கள். அதா வது கத்தோலிக்க வேத விசுவாசத்தைகைவிடும்படி அவனிடம் வற்புறுத்தினர். அதற்கு அவ னும் சம்மதித்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் கிழவனார், அவனை தேவாலயத்தில் தேடிப் பார்த்தார். அவனைக் காணோம்.

ஆண்டுகள் கடந்தன. வாலிபன், ஆஸ்திரேலியாவில் பெரிய பணக்காரனாக உயர்ந் தான். நகரின் முக்கியமான தெருவிலிருந்த ஒரு கடையின் சொந்தக்காரன் அவன். சொத்துக் களும் ஏராளமாக வாங்கினான். அவன் கத்தோலிக்கன் என்பதை அந்த வயோதிபரைத் தவிர வேறெவரும் அறியார். புரோட்டஸ்டான்டு பதித சபையைச் சேர்ந்த ஒருத்தியை அவன் திருமணம் செய்துகொண்டான். அவள் பிரியம் போல், தன் பிள்ளைகளை பதித மார்க்கத்திலே யே வளர்க்க விட்டுவிட்டான். இறுதியாக அவனுக்கு நோய் வந்தது. ஒருநாள் அந்த வயோ திபர் பணக்காரனது வீட்டுப்பக்கமாய் சென்றார். பலர் வீட்டுக்குள் போவதும் வருவதுமாய் இருந்தனர். காரணத்தை விசாரித்தார். பணக்காரனுக்கு சுகமில்லை. வைத்தியர்கள் யாவரும் கைவிட்டார்கள் என்று அறிந்தார். அவனுடைய ஆத்துமத்தை எப்படியாவது காப்பாற்றத் தீர்மானித்து, அவன் வீட்டிற்குள் நுழைந்தார். நோயாளி படுத்திருந்த அறைக்குச் சென்று, அவனருகில் முழந்தாளிட்டார்.

அவனுக்காக ஜெபமாலை சொல்லி ஒப்புக் கொடுத்தார். பின், தான் யாரென்று முத லில் தெரிவித்து, “உன் தாயும் தந்தையும் உன்னை நல்ல கத்தோலிக்கனாக வளர்த்தார்களே! நீ இந்த நிலையில் செத்தால், உன் ஆத்துமத்தை, நித்தியத்திற்கும் இழந்துவிடுவாயே! உன் அம் மாவிற்கும் அப்பாவிற்கும், அது எவ்வளவு வேதனையைத் தரும் என்று சிந்தித்துப் பார்த்தா யா? கத்தோலிக்க குருவானவர் ஒருவரை, அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார். இதைக் கேட்டவுடன், அவன் உணர்ச்சி பெருக்கத்துடன் சப்தமிட்டு அழுதான். உலக செல்வத்திற் காக, விலை உயர்ந்ததும், நித்திய பேரின்ப மோட்ச பாக்கியத்தை அளிக்க வல்லதுமான கத் தோலிக்க வேதவிசுவாசத்தைக் கைவிட்டதையும், வேதகடமைகளை அனுசரியாமல் இருந்த தையும் நினைத்து அழுதான். பின்னர், அவன் வயோதிபரிடம், ” ஐயா! மிக்க நன்றி, நல்லது விரைவில் கூட்டி வாருங்கள்” என கூறினான்.

உடனே வயோதிபர், பங்கு சுவாமியாரைத் தேடிச் சென்றார். அங்கே பங்கு சுவாமி யாரும் மற்ற குருக்களும் வெளியே சென்றிருந்தார்கள். அவர் கொண்ட கவலையைக் கவ னித்த வேலைக்காரன், “ஐயா, அதிக அவசரம் என்றால் மேற்றிராணியாரை அழைத்து வருகி றேன்” என்றான். சிறிது நேரத்தில் மேற்றிராணியாருடன் வந்தான். விஷயத்தைச் சொல்லி, “விரைவில் வாருங்கள், ஆண்டவரே! நோயாளிசாகுமுன் போய்ச் சேர வேண்டும்” என்று வயோதிபர் வற்புறுத்தினார். ஆனால், மேற்றிராணியார், அதற்கு ஓர் நிபந்தனையைக் கூறினார்: “ஒரு புரோட்டஸ்டான்டு பாதிரியாரும், ஒரு போலீஸ் அதிகாரியும் என்னுடன் கூட வர வேண்டும். அழைத்து வந்தால், உடனே போகலாம்” என்று சொல்லிவிட்டார். அவனுடைய ஆத்துமத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று தீர்மானித்திருந்த வயோதிபர் சிரமத்தை கவனியாமல், பல இடங்களுக்கு சென்று பேசி, மேற்றிராணியார் கேட்ட

இருவரையும் அழைத்து வந்தார்.

நால்வருமாகப் புறப்பட்டார்கள். மேற்றிராணியார் எதிர்பார்த்தபடியே, நோயா ளியின் வீட்டினுள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. அதாவது, பதித புராட்டஸ்டான்டு மார்க்கத்தில் உட்பட்டிருந்த பணக்காரனுடைய ஆத்துமத்தை, பசாசு அவ்வளவு எளிதாக கத்தோலிக்க மேற்றிராணியாரிடம் விட்டுவிட மனமில்லாமல், புராட்டஸ்டான்டு பதிதரை, அவருக்கு எதிராக குழப்பம் செய்யும்படி துாண்டியது. உடனே, மேற்றிராணியார், அருகி லிருந்த போலீஸ் அதிகாரியைப் பார்த்து, “ஐயா, இந்த வீட்டின் சொந்தக்காரன், என்னைக் கண்டு பேச விரும்புகிறான். இதோ இங்கு நிற்பவர்கள் என்னைத் தடுக்கின்றனர். நீர் உமது கடமையை நிறைவேற்றும்” என்றார். போலீஸ் பாதுகாப்போடு , மேற்றிராணியார், இருவரு டனும், வீட்டிற்குள் நுழைந்தார். நோயாளியிடம் சென்று, “நண்பா, இவர் ஒரு புரோட் டஸ்டான்டு மத குரு. நான் கத்தோலிக்க மேற்றிராணியார். எங்கள் இருவரில், நீ மோட்சம் செல்வதற்கு, யாருடைய உதவி உனக்கு வேண்டும்?” என்று வினவினார். “ஆண்டவரே! நீங் கள் தான் வேண்டும், நீங்கள் தான் வேண்டும்” என்று சாகக் கிடந்தவன் பதறிச் சொன்னான். “நண்பர்களே, நோயாளி சொன்னதைக் கேட்டீர்களல்லவா? எல்லோரும் சற்று வெளியே போங்கள். நான் இவனுடன் தனியே பேச வேண்டும்” என மேற்றிராணியார் அங்குக் கூடி யிருந்தவர்களிடத்தில் கூறினார். உடனே அங்கிருந்த சகலரும் வெளியேறினர். பல ஆண்டு களாக திவ்ய கத்தோலிக்க வேதத்தை அனுசரியாமல், சர்வேசுரனை மறந்திருந்த பாவி அன்று, உத்தம மனஸ்தாபத்துடன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, கடவுளுடன் சமாதான மானான். அவஸ்தை பூசுதல் பெற்றுக் கொண்டான்.

எல்லாம் முடிந்ததும், தம்பி, இத்தனை காலமாக நீ நேச ஆண்டவரை விட்டு அகன்று திரிந்து, கடைசியாக அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறாய். இது உனக்கு மிகப் பெரிய பாக்கி யமே! நீ , நம் நேச இரட்சகரை மறந்தாலும், அவர் உன்னை மறவாமல் தம்மிடம் திரும்ப சேர்த்துக் கொண்டார். அதற்கு, இதோ இந்த வயோதிபரும், பெரிதும் உதவியிருக்கிறார். அவ ருக்கு நீயும், நானும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆத்தும் தாகம் கொண்ட ஒவ்வொரு கத்தோலிக்கரும், இத்தகைய பிறர் சிநேகத்துடன் ஜீவித்தால், எவ்வளவு சிதறிப் போகும் ஆத்துமங்களைக் காப்பற்றலாம்! இந்த வரத்தைப் பெறுவதற்கு, உன் வாழ்நாளில் நீ ஏதாவது நன்மை செய்திருக்க வேண்டும். அது என்ன?” என்று மேற்றிராணியார் கேட் டார். நோயாளி தன் தலையணையின் கீழ் சற்று நேரம், தேடினான். ஒரு ஜெபமாலை அங்கிருந் தது. அதை எடுத்துக் காண்பித்து,” சுவாமி, நான் பெரிய துஷ்டன்; பெரிய பாவி! நன்மை ஒன் றும் நான் செய்ததில்லை. நான் அயர்லாந்திலிருந்து புறப்படுவதற்குமுன், ஒருகன்னியாஸ்திரி, இதை எனக்குக் கொடுத்து, இந்த ஜெபமாலையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் ஒரு மங்களவார்த்தை ஜெபமாவது சொல்வதாக வாக்களிக்கும்படி என்னிடம் கேட்டார்கள். நானும், அவ்விதமே, வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியில், இது வரை, நான் தவறா மல் நடந்திருக்கிறேன். இதைத் தவிர, வேறு நல்லது எதுவும் நான் செய்ததில்லை” என்று கூறி னான். அந்த ஜெபமாலையைத் தமக்குத் தரும்படி மேற்றிராணியார், அவனிடம் கேட்டார். தன் மரணத்துக்குப் பின் அவர் அதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்று, கூறிய படி அவன், தனக்கு மோட்சத்தை பெற்றுத்தரப்போகும் அத்திருப் பண்டத்தை பக்தியோடு முத்திசெய்து, ஆசையோடு கைகளில் இறுகப் பற்றிக்கொண்டு, மங்கள வார்த்தை ஜெபத் தை, கண்களில் நீர்மல்க ஜெபித்தான். அப்போது, அவன் உயிர் பிரிந்தது. அந்த ஜெபமாலை யை எடுத்துவந்த மேற்றிராணியார், அதைப் பெருந்திரவியமாகக் கருதி வந்தார். சாகுமுன், அவருக்குப்பின், அதே மேற்றிராசனத்தின் மேற்றிராணியாராக பதவி ஏற்க வந்த எனக்கு இதைக் கொடுத்துச் சென்றார்” என்று கதையை முடித்தார். 1

மகா பரிசுத்த ஜெபமாலை இராக்கினியே! வாழ்க!

அர்ச். அமலோற்பவ மாமரியே! வாழ்க!

Leave a comment