Devotion to St. Anthony (Day 25)

இருபத்தைந்தாம் நாள்

பெரார் மிலான் (Ferrare, Milan) இன்னும் பிற இடங்களில் நடந்த நிகழ்ச்சி

கொஞ்ச காலங்களுக்குள்ளாகத் தாம் இறக்க போவதை அர்ச் அந்தோனியார் ஞான திருஷ்டியால் அறிந்து அதிகமதிகமாய்ப் பிரசங்கம் செய்ய சர்வேசுரனுடைய மகிமையையும் பிறருடைய இரக்ஷண்ணியத்தையும் தேழ். அவைகளுக்காக உழைத்தார் பெரார் பட்டணத்தில் சிறிதுகாலந் தங்கி வேலை செய்தார் அவ்விடத்திலிருந்த தெல்வாதோ தேவமாதாவின் (Sancta Maria del vado ஆலயத்துக்கு அடிக்கடி சென்று மகிமை பொருந்திய ஆண்டவளே” “O Gloriosa Domina” என்னும் செபத்தைச் செய்வதில் பிரியங்கொள்ளுவார் அப்பட்டணத்திலிருந்த போதுதான் அறியாயமாய்க் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெரிய குடும்பத்துப் பெண்பிள்ளையின் மாசற்ற தனத்தைப் பாதுகாத்தார். எப்படியென்றால், துரைமகள் ஒருத்தி சமுசார வாழ்க்கையில் பிரமாணிக்கற் தப்பி நடந்ததாகத் தன் புருஷனாலேயே குற்றஞ் சாட்டப்பட்டதினால் வெகுவாய்க் துன்பப்பட்டு அர்ச்சியசிஷ்டவருடைய உதவியை மன்றாடினாள் அந்தோனியார் அவளுடைய வீட்டுக்குப் போய் அவள் புருஷனுக்கு முன்பாகவே அவன் சந்தேகப் படுவதற்குக் காரணமாயிருந்த இரண்டு மூன்று மாசத்துக் குழந்தையைத் தமது கையில் எடுத்து வைத்துக்கொண்டு, அதன் தகப்பன் யாரென்று சொல்லும்படிக்குத் திருக்குழந்தையான சேசுநாதர் நாமத்தாற் கட்டளையிடவே, அச்சிறு பாலகன் துரையைக் காண்பித்து: ‘இதோ என்னுடைய தகப்பன்’ என்று தெளிவாய்ச் சொல்லிற்று. அப்போது அந்தோனியார் தகப்பனை நோக்கி: இது உன் பிள்ளையானதால் அதன்மேற்பட்சமாயிரு, அதனுடைய தாயும் உனக்குத் துரோகம் செய்யாததால் அவள் விஷயத்திலும் மரியாதையாய் நடந்துகொள் என்று சொல்லி விட்டுப் போனார்.

அக்காலத்தில் அர்ச் பிரான்சீஸ்கு சபை அதிசிரேஷ்டர் புளோரென்சு (Florence) பட்டணத்தில் பிறந்தவரானதால் தம்முடைய சொந்த நாட்டில் அர்ச். அந்தோனியார் பிரசங்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டதின்பேரில் அந்நகருக்கு

அந்தோனியார் போய் நான்கு மாசகாலம் பிரசங்கம் செய்து வந்தார் அப்பட்டணத்திலும் சரி, வேரெந்த நாட்டிலும்சரி, அதிக வட்டி  வாங்கினவர்கள் அபரிமிதமாயிருந்ததால். அவ்வநியாயனான நடத்தையின் பேரில் அடிக்கடி பிரசங்கம் செய்து அநேகரை மனந்திருப்பினார். அப்போதுதான் அவ்விடத்திலிருந்த ஒரு பேராசை பிடித்தவன் இறந்துபோய், இவ்வுலகத்தில் ஆஸ்தி பணங்களை மிதமிஞ்சி ஆசித்த அவன் இருதயம் அவன் திரவியங்களை மறைத்து வைத்திருந்த இருப்புப் பெட்டிக்குள்ளிருக்குமென்று ஞான திருஷ்டியால் அறிந்து மற்றவர்களுக்கு அறிவித்திருந்தார். அதே பிரகாரம் அவன் மரித்த பிறகு அவன் பணப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது பணத்தின்மேல் அவன் இருதயம் துடித்துக்கொண்டு கிடக்கிறதை எல்லோருங் கண்டு அதிசயித்து அதுமுதல் அநியாய வட்டி வாங்குகிறதை வீட்டுவிட்டார்கள்,

1229ம் வருஷம் மே மாதத்தில் மிலாள் பட்டனத்தில் பிரசங்கித்து மற்ற இடங்களிலும் வேத வாக்கியத்தை அறிவிக்க வேண்டுமென்று விரைந்து போகையில் வழியிலிருந்த வெர்சேய் நகரில் தங்கித் தமது சிநேகிதரைக் கண்டு தமக்குக் கிட்டியிருக்கிற மரணத்தை அவருக்கு அறிவித்து விட்டு, வாரேஸ் என்னும் இடத்தில் ஓர் மடத்தைக் கட்டுவித்து அதில் ஒரு கிணறு எடுக்கச்செய்து அந்தக் கிணற்றின் தண்ணீணீருக்குக் காய்ச்சலைச் சௌக்கியப்படுத்தும் குணத்தைக் கொடுத்தார். அந்த உதவி தங்களுடைய பட்டணத்துக்கும் செய்யும்படி வெர்சேய் மக்கள் மிகவுங் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அவர்களுக்கும் அவ்வூர் கிணற்றின் தண்ணீரை மந்திரித்துக் கொடுத்தார்.

1230ம் வருஷத் துவக்கத்தில் சிலநாள் ஞான ஒடுக்கஞ் செய்தபிறகு, பெரெஸ்ஸியா (Brescia) பட்டணத்தில் பிரசங்கித்து, வால் தே பெரேஞா (Val de Bregna) என்ற விடத்தில் ஓர் மடத்தையும் கட்டுவித்து, அம்மடத்தில் சிறிது காலம் ஒழுங்குகளை எல்லாம் நல்லபடியாய் அநுசரித்துத் தமது சரீரத்தைக் கடின தபசினால் தண்டித்து வந்தார். அவர் படுத்திருந்த கடினமான கல்லை இன்னமும் அம்மடத்தில் வெகு பூச்சியமாய் வைத்திருக்கிறார்கள்.

கடைசியாய் மான்த்துவா (Mantua) பட்டணம் சேர்ந்து, அவ்விடத்தினின்று ரோமாபுரி போய் 9-ம் கிறகோரியுஸ் என்னும் பாப்பானவரைத் தரிசித்தபோது, அந்தப் பாப்பானவர் அவரைக் கண்டு களித்து அவரை ரோமாபுரியில்தானே திரும்பவும் நிறுத்திக் கொள்ளப் பிரயாசைப்பட்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. அந்தோனியார் சிலகாலம் ஆல்வொன் (Alverne) என்னும் ஸ்தலத்தில் தியான ஏகாந்தத்திலிருந்த பிறகு தமக்கு மிகவும் பிரியமான பதுவா பட்டணம் போய்ச் சேர்ந்தார். நமது சீவிய காலத்தின் பலபல தொந்தரவு தொல்லை களில், நமது ஆத்துமத்தை நாம் மறந்துவிடாமல், எப்போதாவது தனித்து நமதாத்தும காரியங்களை யோசித்துக் கவனிக்கக்கடவோம்.

செபம்

அநேகாயிரம் பாவிகளை மனந்திருப்ப அர்ச். அந்தோனியாருக்கு வரந் தந்தருளின சர்வ வல்லபரான சர்வேசுரா, நானும் என் பாவங்களை வெறுத்து மனந்திரும்பி இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் நித்தியமாய் உம்மை நேசிக்கும்படி அர்ச். அந்தோனியாருடைய பேறுபலன்களைப் பார்த்து அடியேனுக்குக் கட்டளையிட்டருளும் – ஆமென்.

நற்கிரியை: உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகப் பூசை செய்து வைக்கிறது.

மனவல்லயச் செபம்: தியான யோகத்தில் உயர்ந்தவ ரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

Leave a comment