உத்தரிக்கிற ஆத்துமங்களின் வணக்க மாதத்திற்கான தியானம்

திருச்சபை, துவக்கத்திலிருந்தே உத்தரிக்கிற ஆத்துமங்கள் மீது அனுதாபம் காட்டி வந்திருக்கிறது. 10ம் நூற்றாண்டில் ஜீவித்த அர்ச். ஓதிலோ என்ற ஆசீர்வாதப்பர்சபை அதிபர், உத்தரிக்கிறஸ்தல ஆத்துமங்களின் வேதனையைப்பற்றி ஓர்பரிசுத்த தபோதனர் கண்ட காட்சி யைப் பற்றி கேள்விப்பட்டார். உடனே, அதிபர், தம் சபை மடங்களிலெல்லாம், சகல அர்ச்சிஷ்டவர்களின் திருநாளை அடுத்துவரும் நாளில், இறந்த சகல விசுவாசிகளின் இளைப்பாற்றிக்காக, மாலை ஆராதனை ஜெபங்களும் (vespers), காலை ஆராதனை ஜெபங்களும் (matins), திவ்ய பலிபூசையும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டார். குளூனி நகரில் எழுதப்பட்ட இவ்வுத்தரவு இன்னும் பத்திரமாய்ப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கு மிகவும் பயனுள்ளதும், ஏற்புடையதுமான இப்பக்தி முயற்சி நாள் டைவில் முழுவதும், உலகெங்கிலும் பரவியது.

உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக அன்றைய தினம், ஒவ்வொரு குருவும் மூன்று திவ்ய பலிபூசை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கும் திருச்சபை, விசுவாசிகள் அன்று, தாங்கள் காணும் திவ்ய பலிபூசை, உட்கொள்ளும் திவ்ய நன்மை, ஜெபங்கள், தர்மங்கள் சகலத்தையும் இறந்தோருக்காக ஒப்புக்கொடுக்கும்படி, அவற்றிற்கான பல்வேறு வகையான ஞானப்பலன் களைக் கொடுத்துத் துாண்டுகிறது. உத்தரிக்கிற ஆத்துமங்கள், தங்களுக்குத் தாங்களே உதவ முடியாது. ஆதலால், யுத்த சபையிலிருக்கும் சகோதரரான நம்மிடம், அவர்கள், உதவி கேட் கின்றனர். கொடிய வேதனைகளிலிருந்து, தங்களை விடுவிக்கும்படி திவ்யபலிபூசைகள், ஒப் புக்கொடுக்கப்படும்படி ஆசிக்கின்றனர்.

to read more Christian stories https://tamilcatholicprayers.blogspot.com/p/blog-page_15.html

அர்ச். பிரான்ஸ் அசிசியாரின் சீடரான சகோ.ஜியோவான்னி, ஒருமுறை, உத்தரிக்கிற ஆத்துமங்கள் திருநாளன்று, பக்திபற்றுதலுடன் திவ்ய பலி பூசை நிறைவேற்றிய போது, நித்திய பிதாவே! உமது திவ்யகுமாரனின் திருமுகத்தைப்பார்த்து, உத்தரிக்கிற சிறையிலிருக் கும் ஆத்துமங்களை விடுவித்தருளும் என்று ஜெபித்தார். அப்போது, எண்ணமுடியாத திரளான ஆத்துமங்கள் உத்தரிக்கிறஸ்தலத்திலிருந்து வெளியேறி, மிகுந்த பிரகாசத்துடன் மோட்சத் திற்கு செல்வதைக் கண்டார். ஒருசமயம், உத்தரிக்கிற சிறையிலிருந்து விடுபட்ட அர்ச். பெர் நார்துவின் மடத்தைச் சேர்ந்த சந்நியாசி, வயோதிபரான ஒரு சந்நியாசியார் முன்பாகத் தோன்றி, திவ்ய பலிபூசை நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு பீடத்தைச் சுட்டிக் காண்பித்து, என் சங்கிலிகளை அறுத்தெறிந்த பெரிய வல்லமை அதுவே! என் மீட்பின் கிரயம் அதுவே! என் பாவக்கறைகளை அகற்றியது, தேவபலிப்பொருளே! என்றார். திவ்ய பலிபூசையே, ஜீவிய ரும் மரித்தோரும் பயனடைவதற்கான தேவவரப்பிரசாதத்தின் வற்றாத ஊற்று! திவ்ய பலி பூசை அளிக்கும் அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களிலும், பேறுபலன்களிலும், உத்தரிக் கும் சிறையில் அவதியுறும் நமது பெற்றோர் உற்றார் நேசரும் பயனடையும்படியாக, நாம் தினமும் ஜெபிப்போம்!

கீழ்ப்படிதல்

Abraham Obeys God by sacrifice his own Son

பேசுகிறவர்கள் நாங்களல்ல, இஸ்பிரீத்துசாந்துவானவரே பேசுகிறவர்.”’ (மாற்கு 13 : 11)

1 கர்த்தருடைய குருவானவருக்குக் கீழ்ப்படிகிறவன் மனிதனுக்கல்ல, “ உங்களுக்குச் செவி கொடுக்கிறவன் எனக்குச் செவி கொடுக்கிறான் ” (லூக். 10:16) என்று திருவுளம் பற்றிய சர்வேசுரனுக்கே கீழ்ப்படிகிறான்.

2 கீழ்ப்படிந்ததினால் ஒருபோதும் ஒரு ஆத்துமமும் மோசம் போனதில்லை, ஆனால் கீழ்ப்படிதலற்ற ஆத்துமமோ இரட்சணியம் அடைந்ததேயில்லை. (அர்ச். பிலிப்புநேரியார்).

3 ” கீழ்ப்படிதலை அசட்டைபண்ணி, தன் சுய புத்தியின் வெளிச்சத்தில் நடந்துகொண்டு, தனக்குள் உண்டாகும் பயத்தினால் புண்ணிய வழியில் விருத்தியடை யாமலிருக்கிறவனைப் பசாசு சோதிக்கவேண்டியதில்லை. அவனே தனக்கு விரோதமாய்ப் பசாசின் அலுவலைச் செய்துகொள்ளுகிறான் ” என்று அர்ச். பெர்நர்துஸ் வசனித்திருக்கிறார்.

4 விவேகமுள்ள ஆத்தும் குருவானவர் நமக்குக் கற்பிக்கும் விஷயங்களில் தவறிப்போவாரென்றும் அல்லது நமது மனச்சாட்சியை அவருக்கு நாம் வேண்டிய மட்டும் தெளிவாய்த் திறந்து காண்பியாததினால் அதின் நிலைமை அவருக்குச் சரிவரத் தெரியாதென்றும் பயப் படாதபடி எச்சரிக்கையாயிருக்க கடவோம், இவ்வித பயத்துக்கு இடங்கொடுப்போமாகில் ஒன்றில் கீழ்ப்படி யாதபடி சூக்ஷமமாய் விலகிக்கொள்வோம், அல்லது கீழ்ப் படிய யோசிப்போம். ஒ, கிறீஸ்துவ ஆத்துமமே, உன். ஆத்தும் குருவானவர் நீ சொல்லுவதை நன்றாய்க் கண்டு பிடியாமலும், உன் ஆத்தும் நிலைமையை நன்றாய் அறியா மலுமிருப்பாராகில், அல்லது நீ உன்னைத்தானே முற்றும் திறந்து காண்பியா திருப்பாயாகில் அவர் உன்னைத் தொடர்ந்து வினாவியிருப்பார். அவர் உன்னை வினாவாவிட்டால், அவர் உன்னைப்பற்றியதையெல்லாம் வேண்டியமட்டும் நன்றாய் அறிந்திருக்கிறாரென்பது நிச் சயம். ஆத்துமாக்களை நடத்துவதில் தமது ஸ்தானத்தி லிருக்கும் குருவானவருக்குச் சர்வேசுரன் ஞான வெளிச்சமும் உதவியும் வாக்களித்திருக்கிறாரே, இது போதாதா ? பரிசுத்த வேதாகமம் கற்பிப்பதுபோல் நீ அவருக்குக் கபடின்றித் தீவிரமாய்க் கீழ்ப்படிவதற்கு இதற்குமேல் என்ன வேண்டியது ?

5 நமதாத்துமம் என்ன நிலைமையிலிருக்கிறதென் பதை நமக்கல்ல, ஆனால் தமது ஸ்தானத்தில் நம்மை நடத்தும்படி வைக்கப்பட்டிருப்பவருக்குச் சர்வேசுரன் அறிவிக்கிறார். ஆகையால் நீ சன்மார்க்கத்தில் ஒழுகிறா யென்றும், சேசுக்கிறிஸ்துவின் கிருபையும் வரப்பிரசாத மும் உன்னிடம் குடியிருக்கிறதென்றும் அக்குருவானவர் வாயினின்று நீ அறிவது போதுமானது. இது விஷயத் தில் மற்றக் காரியங்களில் நீ நடந்துகொள்வதுபோல் அவரை நம்பி, அவருக்குக் கீழ்ப்படிவாயாக. ஏனெனில் ஆத்தும் குருவானவருக்குச் சகலத்திலும் முற்றும் கீழ்ப்படியாதிருப்பது அகங்காரமும் விசுவாசக் குறைச் சலுமாகுமென்று அர்ச். சிலுவை அருளப்பர் வசனித திருக்கிறார்.

6 கிறீஸ்துவனுக்கு எல்லாத்தையும்விடக் கீழ்ப் படிதல் அவசரம். கீழ்ப்ப டிவதினால் அவன் பாவங் கட்டிக்கொள்வதாக அவன் ஆத்துமத்தில் உதிக்கும் வீண் பயத்தைச் சட்டைபண்ணாதிருப்பானாக. முற்றுபே அபாயமற்ற கீழ்ப்படிதலின் மார்க்கத்தில் தத்தளியாமல் உறுதியாய் நடப்பானாக. அர்ச். பெர்நர் துஸ் சொல்லு கிறதாவது : ” ஒழுங்குமுறையோடு நீ கீழ்ப்படிந்து கொண்டிருக்கும்போது, உன் மனச்சாட்சியின் இயல் பான உணர்ச்சிக்கே விரோதமாய் நீ நடக்கிறதாக சில சமயங்களில் பயப்படுவாய்; நீ பாவங்கட்டிக்கொள்ள தாக உனக்குத் தோன்றும். ஆனால் அதற்கு நே விரோதமாய் நீ சர்வேசுரன் சமுகத்தில் பெரும் பேறு பலனைச் சம்பாதித்துக்கொள்ளுகிறாய்.”

7 கீழ்ப்படிதல் என்ற புண்ணியம் நமது வெளிக் கிருத்தியங்களை ஒழுங்குப்படுத்துவதுமட்டும் போதாது நமது புத்தியையும் மனதையுங்கூட நடப்பிக்கவேண்டும் அப்படியே கீழ்படிதலானது கட்டளையிடுவதைச் செய் வதுதான் போதுமென்றிராதே; அதுமட்டும் பற்றாது ஆனால் நீ விசுவசிக்கவும் விரும்பவும் வேணுமென்று அது கற்பிப்பதை நீ விசுவசிக்கவும் விரும்பவும் வேண் டியது. இவ்வுள்ளரங்க சிரவணத்தில்தான் பரிசுத்த கீழ் படிதலின் பேறுபலன் விசேஷமாய் அடங்கியிரு கின்றது.

8 உனது கீழ்ப்படிதல் கபடற்றதும், தீவிரமானதும், பூரணமானதும், கவலை கலக்கமற்றதுமாயிருக்கம் டும்

கபடற்றதாயிருக்கவேண்டியது : ஏனெனில் அது உன்னிடம் கேட்பது நியாயமாவென்று விசாரிக்கலா காது, ஆனால் நான் கீழ்ப்படிவது அவசரம் என்ற இந்த ஓர் நினைவே உன் தீர்மானமாயிருக்கவேண்டியது ; –

தீவிரமானதாயிருக்கவேண்டியது : ஏனெனில் நீ சர்வேசுரனுக்கே கீழ்ப்படிகிறாய்.

பூரணமாயிருக்கவேண்டியது : ஏனெனில் தேவ சட்டத்துக்கு விரோதமற்ற சகலமும் அதனுள் அடங்கி யிருக்கின்றது.

கவலை கலக்கமற்றதாயிருக்கவேண்டியது : ஏனெ னில் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிகிறவன் பிசகமுடியாது. இந்த ஒரே நினைவு நீ தப்பிதஞ்செய்கிறாய் அல்லது தப் பிதஞ்செய்துவிட்டாய் என்ற பயத்தை அகற்றப் போது மானது.