உத்தரிக்கிற ஆத்துமங்களின் வணக்க மாதத்திற்கான தியானம்

திருச்சபை, துவக்கத்திலிருந்தே உத்தரிக்கிற ஆத்துமங்கள் மீது அனுதாபம் காட்டி வந்திருக்கிறது. 10ம் நூற்றாண்டில் ஜீவித்த அர்ச். ஓதிலோ என்ற ஆசீர்வாதப்பர்சபை அதிபர், உத்தரிக்கிறஸ்தல ஆத்துமங்களின் வேதனையைப்பற்றி ஓர்பரிசுத்த தபோதனர் கண்ட காட்சி யைப் பற்றி கேள்விப்பட்டார். உடனே, அதிபர், தம் சபை மடங்களிலெல்லாம், சகல அர்ச்சிஷ்டவர்களின் திருநாளை அடுத்துவரும் நாளில், இறந்த சகல விசுவாசிகளின் இளைப்பாற்றிக்காக, மாலை ஆராதனை ஜெபங்களும் (vespers), காலை ஆராதனை ஜெபங்களும் (matins), திவ்ய பலிபூசையும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டார். குளூனி நகரில் எழுதப்பட்ட இவ்வுத்தரவு இன்னும் பத்திரமாய்ப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கு மிகவும் பயனுள்ளதும், ஏற்புடையதுமான இப்பக்தி முயற்சி நாள் டைவில் முழுவதும், உலகெங்கிலும் பரவியது.

உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக அன்றைய தினம், ஒவ்வொரு குருவும் மூன்று திவ்ய பலிபூசை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கும் திருச்சபை, விசுவாசிகள் அன்று, தாங்கள் காணும் திவ்ய பலிபூசை, உட்கொள்ளும் திவ்ய நன்மை, ஜெபங்கள், தர்மங்கள் சகலத்தையும் இறந்தோருக்காக ஒப்புக்கொடுக்கும்படி, அவற்றிற்கான பல்வேறு வகையான ஞானப்பலன் களைக் கொடுத்துத் துாண்டுகிறது. உத்தரிக்கிற ஆத்துமங்கள், தங்களுக்குத் தாங்களே உதவ முடியாது. ஆதலால், யுத்த சபையிலிருக்கும் சகோதரரான நம்மிடம், அவர்கள், உதவி கேட் கின்றனர். கொடிய வேதனைகளிலிருந்து, தங்களை விடுவிக்கும்படி திவ்யபலிபூசைகள், ஒப் புக்கொடுக்கப்படும்படி ஆசிக்கின்றனர்.

to read more Christian stories https://tamilcatholicprayers.blogspot.com/p/blog-page_15.html

அர்ச். பிரான்ஸ் அசிசியாரின் சீடரான சகோ.ஜியோவான்னி, ஒருமுறை, உத்தரிக்கிற ஆத்துமங்கள் திருநாளன்று, பக்திபற்றுதலுடன் திவ்ய பலி பூசை நிறைவேற்றிய போது, நித்திய பிதாவே! உமது திவ்யகுமாரனின் திருமுகத்தைப்பார்த்து, உத்தரிக்கிற சிறையிலிருக் கும் ஆத்துமங்களை விடுவித்தருளும் என்று ஜெபித்தார். அப்போது, எண்ணமுடியாத திரளான ஆத்துமங்கள் உத்தரிக்கிறஸ்தலத்திலிருந்து வெளியேறி, மிகுந்த பிரகாசத்துடன் மோட்சத் திற்கு செல்வதைக் கண்டார். ஒருசமயம், உத்தரிக்கிற சிறையிலிருந்து விடுபட்ட அர்ச். பெர் நார்துவின் மடத்தைச் சேர்ந்த சந்நியாசி, வயோதிபரான ஒரு சந்நியாசியார் முன்பாகத் தோன்றி, திவ்ய பலிபூசை நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு பீடத்தைச் சுட்டிக் காண்பித்து, என் சங்கிலிகளை அறுத்தெறிந்த பெரிய வல்லமை அதுவே! என் மீட்பின் கிரயம் அதுவே! என் பாவக்கறைகளை அகற்றியது, தேவபலிப்பொருளே! என்றார். திவ்ய பலிபூசையே, ஜீவிய ரும் மரித்தோரும் பயனடைவதற்கான தேவவரப்பிரசாதத்தின் வற்றாத ஊற்று! திவ்ய பலி பூசை அளிக்கும் அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களிலும், பேறுபலன்களிலும், உத்தரிக் கும் சிறையில் அவதியுறும் நமது பெற்றோர் உற்றார் நேசரும் பயனடையும்படியாக, நாம் தினமும் ஜெபிப்போம்!